தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: மராட்டியத்தில் 23 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் மேலும் 125-பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 42,462- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 441- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 39,646- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 67.60 லட்சமாக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் தொற்று மீட்பு விகிதம் 94.28 சதவிகிதமாக உள்ளது.

அதேபோல், மராட்டியத்தில் மேலும் 125-பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,730-ஆக உயர்ந்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு