தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

கொரோனா வைரசின் கோரப்பிடியில் மராட்டிய மாநிலம் சிக்கி தவித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது.

இந்நிலையில் மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 233 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3,606 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,52,613 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டியத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,75,640 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் மராட்டியத்தில் இதுவரை 10,928 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் 1,11,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு