தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வன்முறை தொடர்பாக 2,642 பேர் கைது - மத்திய அரசு தகவல்

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியதாக 2,642 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது நடந்த போராட்டத்தில் ரெயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ரெயில்வே சொத்துக்களின் சேதம் குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்டோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் அளித்த பதிலில், மத்திய ரெயில்வே, கிழக்கு ரெயில்வே மற்றும் தென்னக ரெயில்வே என 12 மண்டலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியதாக 2,642 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தென்னக ரெயில்வேயில் மட்டும் 1,051 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்