தேசிய செய்திகள்

10 லட்சம் பேருக்கு 26,685 மாதிரிகள்: கொரோனா பரிசோதனை விகிதம் உயர்வு

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 26,685 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பரிசோதனை விகிதம் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

நேற்று முன்தினம் 9 லட்சத்து 25 ஆயிரத்து 383 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் நாட்டில் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் பரிசோதனை விகிதம், 10 லட்சம் பேருக்கு 26 ஆயிரத்து 685 மாதிரிகள் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி ஒரே ஒரு பரிசோதனைக்கூடம் புனேயில் இருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் 1,524 பரிசோதனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பது, பரிசோதனைகளை அதிகரிப்பதில் பக்க பலமாக உள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு