புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
நேற்று முன்தினம் 9 லட்சத்து 25 ஆயிரத்து 383 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் நாட்டில் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் பரிசோதனை விகிதம், 10 லட்சம் பேருக்கு 26 ஆயிரத்து 685 மாதிரிகள் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி ஒரே ஒரு பரிசோதனைக்கூடம் புனேயில் இருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் 1,524 பரிசோதனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பது, பரிசோதனைகளை அதிகரிப்பதில் பக்க பலமாக உள்ளன.