தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 2,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,885 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 2,885 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இன்று 2,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,140 ஆகும். இன்றைக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 42 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 137 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 2,640 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 287 பேருக்கு எதன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கொரோனா பாதிப்புக்கு இன்று 15 பேர் உயிரிழந்துள்ளநிலையில், இதுவரை 425 பேர் பலியாகி உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,944 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 75,848 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 28,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்