தேசிய செய்திகள்

7 வெளிநாட்டு பயணிகள் உள்பட தமிழ்நாட்டில் 29 பேருக்கு கொரோனா

7 வெளிநாட்டு பயணிகள் உள்பட தமிழ்நாட்டில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 29 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதில், 20 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 6 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 7 பேர் உள்பட மொத்தம் 12 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 26 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல தமிழகத்தில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு