தேசிய செய்திகள்

2 ஜி மேல்முறையீட்டு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

2 ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

2 ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இது பொது நலன் சார்ந்த வழக்கு, எனவே உடனடி விசாரணை தேவை என வாதிட்டார்.

இதனை தொடர்ந்து எதிர்தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கொரோனா காலத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை