தேசிய செய்திகள்

சிறார்களுக்கு குறித்த நேரத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சிறார்கள் 2-வது டோஸ் தடுப்பூசியை குறித்த நேரத்தில் செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இதுவரை 15 வயது முதல் 18 வயது வரையிலான 4 கோடியே 66 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 28 நாட்களுக்குப் பிறகு, அதன் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஜனவரி 3 ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட 42 லட்சம் சிறார்கள ஜனவரி 31 ஆம் தேதி 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் நிலுவையில் உள்ள பயனாளிகள் அனைவரும் குறித்த நேரத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு