நகரி,
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பீம்கள் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மகன் ஹரிஷ் (வயது 10), மகள் வர்ஷினி (5) இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் அரவிந்த் (4) ஆகிய 3 சிறுவர்களும் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக 3 பேரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் மண் தோண்டப்பட்டதால் அந்த குட்டையில் ஆழமான பள்ளங்கள் இருந்துள்ளன. தற்போதைய மழையினால் குட்டையில் தண்ணீர் நிரம்பியிருந்ததால், ஆழம் தெரியாமல் 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.
இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 3 சிறுவர்களின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை உள்பட 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி யான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.