தேசிய செய்திகள்

சிக்கிமில் 3 மந்திரி, 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா

சிக்கிமில் 3 மந்திரி, 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காங்டக்,

சிக்கிம் மாநில சட்டசபை நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் கூடுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்-மந்திரி, மாநில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை மந்திரி லோக்நாத் சர்மா, வனத்துறை மந்திரி கர்மா லோடே புட்டியா, மின்துறை மந்திரி மிங்மா நோர்பு செர்பா ஆகிய 3 மந்திரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதேபோல பாரதீய ஜனதாவை சேர்ந்த பர்வந்தி தமாங், டி.டி.புட்டியா ஆகிய 2 எம்.எல்.ஏ.க்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிக்கிமில் கொரோனாவுக்கு இதுவரை 2 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டு 25 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்