கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் 'குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும்' - அமித்ஷா உறுதி

புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக 3 புதிய மசோதாக்களை மத்திய அரசு கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாக்கள் சட்டமானால் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு காலனித்துவ சட்டங்களுடன் தொடர்புடையது. ஆனால் தற்போதைய 3 புதிய மசோதாக்களிலும் காலனித்துவ முத்திரை இல்லை. மாறாக இந்திய மண்ணின் சுவை உள்ளது. இந்த சட்டங்களின் மையப்புள்ளி அரசியலமைப்பு, மனித உரிமைகள் மற்றும் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதாகும்' என்று கூறினார்.

சுமார் 160 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டங்கள் முற்றிலும் புதிய அணுகுமுறை மற்றும் புதிய அமைப்புடன் கொண்டு வரப்படுவதாக கூறிய அமித்ஷா, புதிய முன்முயற்சிகளுடன், சட்டத்திற்கு ஏற்ற சூழல் அமைப்பை உருவாக்க அரசால் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த புதிய சட்டங்கள் தண்டனையை விட நீதி வழங்குவதில் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து