தேசிய செய்திகள்

தமிழக வாலிபர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது

பெங்களூருவில் தமிழக வாலிபர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு பனசங்கரி அருகே கதிரேனஹள்ளியில் வசித்தவர் பிரசாந்த் (வயது 30), தமிழகத்தை சேர்ந்த இவர், சிட்டி மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வந்தார். கடந்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரசாந்தை, அவரது நண்பாகள் கொலை செய்திருந்தனர். இதுகுறித்து சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த வசந்த்குமார் (25), சரண்ராஜ் (26), முகுந்தன் (25) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் தலைமறைவாக இருந்த 3 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து