தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைது - மக்களவையில், உள்துறை இணை மந்திரி பதில்

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் மக்களவையில், உள்துறை இணை மந்திரி தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி பதிலளித்து பேசியதாவது:-

புல்வாமா சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டதிலும், செயல்படுத்தியதிலும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த தாக்குதலில் 5 பேர் ஈடுபட்டனர். அதில் ஒருவர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிர் இழந்தார். இதையடுத்து 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்