தேசிய செய்திகள்

ரூ.50 ஆயிரம் கோடியில் 3 புதிய திட்டங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

எலெக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய, ரூ.50 ஆயிரம் கோடியில் 3 புதிய திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 6 ஆண்டுகளில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி வேகம் அடைந்துள்ளது. மொபைல் போன் உற்பத்தியில் உலகில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் முதல் இடத்தை பெற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையவும், மொபைல் போன் உற்பத்தியில் முதல் இடத்தை பெறவும் ரூ.50 ஆயிரம் கோடியில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்பு பெருகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்