தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நஞ்சான உணவை சாப்பிட்ட 31 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

மராட்டியத்தின் புனே நகரில் உள்ள பயிற்சி மைய மாணவிகள் 31 பேர் நஞ்சான உணவை சாப்பிட்டதில் உடல்நல பாதிப்பு அடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் குஸ்காவன் பகுதியில் நவ் குருகுல் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வந்த மாணவிகள் சிலர் கடந்த 25ந்தேதி நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டதில் மாணவிகள் 31 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அனைவரின் உடல்நலம் சீராக உள்ளது. இதுபற்றி உள்ளூர் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. உணவு மற்றும் நீர் மாதிரிகளை சேகரித்து வர குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து