தேசிய செய்திகள்

அசாமில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவு

அசாம் மாநிலத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு தெரிவித்துள்ளது.

மாலை 4.52 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் கம்ரூப் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தது. மிகப்பெரிய நகரமான கவுகாத்தி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. வடகிழக்கு பகுதி, அதிக நில அதிர்வு மண்டலத்தில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்