ஜம்மு-காஷ்மீர்,
தெற்கு காஷ்மீரின் குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் மாநில பாதுகாப்பு படையினருடன் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த மோதலில், நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குல்காம் மாவட்டம் சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதேபோல் புல்வாமா மாவட்டத்தின் டடோரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்பட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.