தேசிய செய்திகள்

மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இம்பால்,

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

யு.என்.எல்.எப்.(பி) என்ற அமைப்பை சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் சட்ட விரோத ஆயுத விற்பனை மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.