கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா - 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை

இந்தியாவில் நேற்று மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 40 பேர் என்ற அளவில் தினசரி பாதிப்பு குறைந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 264 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 886 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 16 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,463 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் உயிர்ப்பலி இல்லை. அதனால், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்