தேசிய செய்திகள்

400 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை - விமானப்படை தகவல்

பிரம்மோஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக சென்று தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய விமானப்படை இன்று இலக்கு நீட்டிக்கப்பட்ட விண்ணில் இருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானப்படையின் சுகோய்-30 போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக சென்று தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிசோதனையின் மூலம் பிரம்மோஸ் ஏவுகணை சுமார் 400 கி.மீ. வரை சென்று இலக்கை தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்