தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் இன்று ரிக்டர் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கரேரி மாவட்டத்தில் இன்று இரவு 8.21 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு