தேசிய செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது; ரூ.5¾ லட்சம் பறிமுதல்

சிக்கமகளூருவில் வெவ்வேறு இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புரா பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக ஜெயப்புரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 35 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5.54 லட்சம் ரொக்கம், 35 செல்போன்கள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், சிக்கமகளூரு டவுன் மதுவன லே-அவுட் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதேப்பகுதியை சேர்ந்த ராகில், அசைன்கான், இம்தியாஸ், முகமது ரசூல், நயாஜ் உள்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஜெயப்புரா மற்றும் சிக்கமகளூரு டவுன் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு