தேசிய செய்திகள்

உ.பி. இறுதிகட்ட தேர்தல்: மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், மீதமிருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையிலிருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று மதியம் 3 மணி நிலவரப்படி அங்கு 46.40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை அதிகபட்சமாக சண்டௌலி - (50.75%), சோன்பத்ரா - (49.82%) மற்றும் பதோஹி - (47.50%) தொகுதிகளில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை