தேசிய செய்திகள்

ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்பு; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடுமையாக உள்ளது. எனவே ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக 58 இந்தியர்களும், 2-வது கட்டமாக 44 இந்திய யாத்திரிகர்களும் முறையே கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் 3-வது கட்டமாக நேற்று முன் தினம் 230 இந்தியர்கள் ஈரானிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜெய்சல்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், 4-வது கட்டமாக 52 இந்திய மாணவர்கள் 1 ஆசிரியர் உள்பட 53 இந்தியர்கள், ஈரானின் தெஹ்ரான் மற்றும் ஷிராஸ் நகரிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டனர். அதிகாலை 3 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்த அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். ஈரானிலிருந்து 389 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்