தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கட்டிடம் இடிந்ததில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவரை காணவில்லை.

தினத்தந்தி

தானே,

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் உல்லாஸ்நகர் பகுதியில் அமைந்த கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி திடீரென இன்று இடிந்து விழுந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் சம்பவ பகுதியில் இருந்து 11 பேரை உயிருடன் மீட்டனர்.

இதன்பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கட்டிட விபத்தில், 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணியும் நடந்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்