தேசிய செய்திகள்

இமாசலபிரதேசத்தில் சாலை விபத்தில் 5 பேர் பலி

பயங்கர சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தினத்தந்தி

மண்டி,

இமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டம் கர்சாக்-சிம்லா சாலையில் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அல்சிண்டி கிராம பகுதி அருகே வந்தபோது அந்த வாகனம் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் பாய்ந்தது.

பயங்கர சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் மீட்பு பணியில் வாகனத்தில் இருந்த 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் பற்றிய தெரியவில்லை. விபத்தில் சிக்கியவர்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்