தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் சாலை விபத்து: 5 பேர் பலி

தெலுங்கானாவில் வளைவில் திரும்பிய கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கோபனபள்ளி என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த கார் சாலையின் வளைவில் திரும்பியபொழுது, எதிரே வந்த லாரி ஒன்று அதன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். லாரி ஓட்டுனர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து