தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவுகள்: மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. ஆளும் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவாக முடிவுகள் அமைந்துள்ளது.

சத்தீஷ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள். சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்