Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே செயல்படும்: மணிப்பூர் அரசு அறிவிப்பு

அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே செயல்படும் என்று மணிப்பூர் முதல்-மந்திரி பைரேன் சிங் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மார்ச் 10ஆம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநிலத்தில் உள்ள 60 தெகுதிகளில் பாஜக 32 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்ததது. இதன்படி பைரேன் சிங் மீண்டும் முதல்-மந்திரியாக பெறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து அவர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 22ஆம் தேதி முதல்-மந்திரி பைரேன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் அரசு அலுவலகங்களின் நேரத்தை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படவும், 2 நாள் விடுமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதுதெடர்பாக தற்பேது மணிப்பூர் அரசின் துணைச் செயலர் சுனந்தா தோக்சோம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மாநிலத்தில் அனைத்து அரசு துறை நிறுவனங்கள், அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும். அதன்படி கேடைக்காலமான மார்ச் முதல் அக்டேபர் மாதம் வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், குளிர்காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் அலுவலகம் செயல்படும். 2 நடைமுறையிலும் மதிய உணவு இடைவேளை 1 முதல் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். இந்த அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பள்ளிகளை பெறுத்தமட்டில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை காலை 8 மணிக்கு துவக்கலாம். இதுதவிர நேரத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் செய்து வழங்கலாம்'' என அதில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்