கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

5ஜி ஸ்பெக்ட்ரம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏலம்: மத்திய மந்திரி தகவல்

5ஜி ஸ்பெக்ட்ரம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏலம் விடப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தற்போது, நாடு முழுவதும் 4ஜி தொலைத்தொடர்பு சேவை அமலில் உள்ளது. 5ஜி சேவையை கொண்டு வருவதற்காக, 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட உள்ளது.

இதுதொடர்பாக பேசிய மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், 5ஜி ஸ்பெக்ட்ரம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏலம் விடப்படும். முடிந்தால், ஜனவரி மாதமே ஏலம் விட முயன்று வருகிறோம்.

மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சீர்திருத்தங்களால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இத்தொழிலில் தாக்குப்பிடிக்க முடியும். இன்னும் நிறைய சீர்திருத்தங்கள் வர இருப்பதால், புதிய நிறுவனங்களும் இத்தொழிலுக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்