சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி. 
தேசிய செய்திகள்

சிவமொக்கா அருகே வெடிபொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி வெடித்து 6 பேர் பலி

சிவமொக்கா அருகே வெடி பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி வெடித்து, பீகார் மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியாகினர்.

தினத்தந்தி

பெங்களூரு,

சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே ரெயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி ஒன்று அமைந்திருக்கிறது.

நேற்று இரவு அந்த கல்குவாரிக்கு ஒரு லாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ரெயில்வே கிரசர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியது.

இதில் லாரியில் இருந்த வெடி பொருட்கள் அனைத்து வெடித்தும் சிதறின. லாரியும் வெடித்து சிதறி சுக்கு நூறாகியது. மேலும் லாரி டிரைவர் மற்றும் லாரியில் பயணித்து வந்த தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். டிரைவர் உள்பட 6-க்கும் மேற்பட்டோர் இந்த வெடி விபத்தில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 6 பேரின் உடல்களை கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது உள்பட வேறு எந்த தகவல்களும் உடனடியாக கிடைக்கவில்லை.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தில் உயிர் பலி மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி சிவமொக்கா புறநகர் தொகுதி எம்.எல்.ஏ. அசோக் நாயக் கூறுகையில், சிவமொக்கா அருகே பயங்கர சத்தம் கேட்டது. அது வெடி பொருட்களை ஏற்றி வந்த லாரி வெடித்து சிதறியதால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 6 பேர் இறந்துவிட்டதாக தெரிகிறது. அந்த பயங்கர சத்தம் என் வீடு உள்பட சிவமொக்கா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதுபோல் இருந்தது என்று கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து