தேசிய செய்திகள்

பாரக் ஒபாமாவால் 6 முஸ்லிம் நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன; நிர்மலா சீதாராமன் தாக்கு

இந்திய முஸ்லிம்களை பற்றி பாரக் ஒபாமா பேசிய நிலையில், அவரால் 6 முஸ்லிம் நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 4 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அப்போது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறும்போது, அதிபர் பைடன், பிரதமர் மோடியுடன் பேசினால் இந்தியாவில், வாழ கூடிய சிறுபான்மையினரின் உரிமைகளை பற்றி பேசலாம். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால் என்னவாகும்? என அவர் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று கூறும்போது, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி (பாரக் ஒபாமா) இந்திய முஸ்லிம்களை பற்றி பேசியுள்ளார். நான் எச்சரிக்கையுடனேயே பேசுகிறேன்.

அமெரிக்காவுடன் நல்ல நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், இந்தியாவின் மத சகிப்புதன்மையை பற்றி அமெரிக்காவில் இருந்து கருத்துகள் வருகின்றன. அவரால் (ஒபாமா) 6 முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன என அதிரடியாக கூறியுள்ளார்.

வெளிநாடு செல்லும் தலைவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என எதிர்க்கட்சிகளையும் அவர் சாடியுள்ளார். அவர்களால் பிரதமர் மோடியை வீழ்த்த முடியவில்லை. அதனால், வேறு வழிகளில் செல்கின்றனர். அவர்களுடைய விவாதங்களில் இதுபோன்ற விசயங்கள் ஒரு பகுதியாக அமைகின்றன என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஏழைகள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் உதவியற்றவர்களாக உணருகிறார்கள் என பேசினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு