கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் நேற்று புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று அது சற்று குறைந்தது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 919 ஆக உயர்ந்தது.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 5 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தமாக 1,503 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்தனர். நேற்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 928 ஆக உயர்ந்தது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு