தேசிய செய்திகள்

ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி - மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம்

நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் மின்சார தட்டுபாடு ஏற்பட்டு, பல மாநிலங்களில் 2 முதல் 8 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்ததன் காரணமாகவே, மின்சார பற்றாக்குறை நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோல் இந்தியா நிறுவனம் 534.7 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 6.02% அதிகம் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை