தேசிய செய்திகள்

மகனுக்கு கிட்னி வழங்கிய 72 வயது மூதாட்டி - நெகிழ்ச்சி சம்பவம்

இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது

தினத்தந்தி

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மூதாட்டி கங்கா (வயது 72). இவரது மகன் கமலேஷ் (வயது 46). இதனிடையே, கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கமலேஷ் கடந்த 3 ஆண்டுகளாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கமலேசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், மகன் கமலேசுக்கு தனது கிட்னியை தானமாக வழங்க கங்கா முன்வந்தார். கங்காவின் 2 கிட்னிகளும் நல்ல நிலையில் உள்ளன என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை மூலம் கங்காவின் ஒரு கிட்னி கமலேசுக்கு பொருத்தப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது