தேசிய செய்திகள்

சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த 76 வீரர்கள் குணமடைந்து வருகின்றனர்; விரைவில் பணிக்கு திரும்புவார்கள்

எல்லையில் சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த 76 வீரர்கள் குணமடைந்து வருகின்றனர்; விரைவில் பணிக்கு திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி:

இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த இந்திய ராணுவத்தின் 76 வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த வீரர்களில், 18 பேர் லேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்கள் 15 நாட்களுக்குள் தங்கள் பணிக்கு திரும்புவார்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். மீதமுள்ள 56 மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பற்று வருகிறார்கள்.அவர்கள் ஒரு வாரத்தில் பணிக்கு திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு