தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் - மீட்கும் பணி தீவிரம்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தைசை சேர்ந்த சிறுவன் பிரியான்ஷ் வயது 7). குடும்பத்தினருடன் தோட்டத்திற்கு சென்ற போது மூடாமல் வைக்கப்பட்டிருந்த 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் பிரியான்ஷ் தவறி விழுந்துவிட்டான்.

சிறுவன் ஆழ்துளை கிணற்றில் 15 முதல் 20 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதால் ஜேசிபி மூலம் குழியை சுற்றி பள்ளம் தோன்றி சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 4 நாட்களில் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் 2 வது சம்பவம் இது. கடந்த வெள்ளிக்கிழமை இதேபோல் 4 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 16 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை மீட்டனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்