தேசிய செய்திகள்

டெல்லி அருகே ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து: 8 பேர் பலி

ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தையடுத்து, தொழிற்சாலையில் தி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில தொழிலாளர்கள் ஆலையில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சில தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளை முடுக்கி விட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்