தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் - மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என மத்திய இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் மத்திய இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2022-ம் ஆண்டில் 4 பேரும், 2020-ம் ஆண்டில் ஒருவரும், 2021-ம் ஆண்டில் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இதில், காஷ்மீர் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ராய், கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு திட்டங்களுக்காக சுமார் 2,815 கோடி ரூபாயை மத்திய உள்துறை அமைச்சகம் செலவிட்டுள்ளது. கடந்த 2019-20-ல் ரூ. ஆயிரத்து 267 கோடியும், 2020-21ல் ரூ.611 கோடியும், 2021-22ல் ரூ.936.095 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்