தேசிய செய்திகள்

"ஆண்டு முழுவதும் ஒரு அரசியல் சாசன அமர்வு செயல்படும்" - சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி

வழக்குகள் பட்டியலிடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும் என சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி யு.யு. லலித் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆண்டு முழுவதும் ஒரு அரசியல் சாசன அமர்வு செயல்படும்படி முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், வழக்குகள் பட்டியலிடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஓய்வு பெற்றதை ஒட்டி, வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நீதிபதி யு.யு. லலித், அவருடைய பதவி காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள முக்கிய முன்மொழிவுகள் குறித்து பட்டியலிட்டார்.

அதில், ஆண்டு முழுவதும் ஒரு அரசியல் சாசன அமர்வு செயல்படும்படி முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், வழக்குகள் பட்டியலிடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும் என கூறினார்.

அவசர வழக்குகளை விசாரிக்க கோரி உரிய அமர்வு முன் முறையிடும் நடைமுறை கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து