தேசிய செய்திகள்

அரியானாவில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்

அரியானாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபத் என்ற பகுதியில் இன்று அதிகாலை 12.27 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பதட்டமடைந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். சோனிபத் பகுதிக்கு தென்மேற்கில் சுமார் 4.8 கி.மீ. தூரத்தில், தரைப்பகுதியில் இருந்து 14 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...