தேசிய செய்திகள்

சென்னையில் இருந்து கேரளா வந்தவருக்கு கொரோனா தொற்று- கேரள முதல்வர் பினராயி விஜயன்

சென்னையில் இருந்து கேரளா வந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னையில் இருந்து எர்ணாகுளம் திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

19810 - பேர் வீட்டுக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 347 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை 33,586 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 35,355 பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளன என்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...