தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,667-பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 480- பேர் உயிரிழந்துள்ளனர்

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- கடந்த 24 மணி நேரத்தில் 38,667- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே நாளில் 478- பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து 35,743- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,87,673- ஆக உள்ளது. இந்தியாவில் வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 2.05 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 53.61 கோடியாக உள்ளது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்