கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

வாடகைக்கு வீடு தேடிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..! அதிர்ச்சி சம்பவம்

மயக்க மருந்து கலந்த தண்ணீரை வாங்கி குடித்த அப்பெண், சுய நினைவை இழந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், வாடகைக்கு வீடு தேடி அலைந்துள்ளார். அப்போது வீட்டு புரோக்கரான ஜிதேந்திர சவுத்ரி என்பவரை தொடர்புகொண்டு வாடகைக்கு வீடு அமைத்துக்கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது, வாடகைக்கு வீடு ஒன்று உள்ளது என்றும், வீட்டைக் காண்பிப்பதாகவும் கூறி, ஜிதேந்திர சவுத்ரியும் அவரது நண்பரும் அந்தப் பெண்ணை ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அப்பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரைக் கொடுத்துள்ளனர்.

மயக்க மருந்து கலந்த தண்ணீரை வாங்கி குடித்த அப்பெண், சுய நினைவை இழந்தார். இதையடுத்து அப்பெண்ணை இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்