தேசிய செய்திகள்

குரானை அவமதித்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டுகள் சிறை

குரானை அவமதித்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சண்டிகர்,

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி பஞ்சாப் மாநிலம் மலேர்கோட்டா மாவட்டதில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் சில பக்கங்கள் கிழக்கப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவத்தால் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறி, வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முகமது அஸ்ரப் என்பவர் மலேர்கோட்டா மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பரிமேந்தர் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அவருடன் கைது செய்யப்பட்ட விஜய் குமார் மற்றும் கவுரவ் குமார் ஆகியோருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, நந்த் கிஷோர் என்பவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்