Image Courtesy : @akhileshsharma1 twitter 
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு தக்காளி மாலை அணிந்து வந்த ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குப்தா

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தக்காளி மாலை அணிந்து வந்ததாக சுஷில் குப்தா தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுஷில் குப்தா, இஞ்சி மற்றும் தக்காளி மாலை அணிந்து, நாடாளுமன்றத்துக்கு நேற்று வந்தார்.

அப்போது அவருக்கு அருகில் இருந்த எம்.பி.க்கு பேச வாய்ப்பு கிடைத்தது. அவர் எழுந்து பேசு ஆரம்பித்ததும், சுஷில் குப்தா தான் அணிந்து வந்த இஞ்சி, தக்காளி மாலையை எடுத்து அவருக்கு அருகில் கேமரா முன் காண்பித்தார். இதற்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அதிருப்தி தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து சுஷில் குப்தா கூறுகையில், "பணவீக்கத்தால் நாடே எரிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தேர்தல் நிர்வாகத்தில் மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தக்காளி கிலோ ரூ.250-க்கும், இஞ்சி ரூ.350-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. எல்லாவற்றின் விலையாலும் மக்கள் கவலையில் உள்ளனர். ஆனால் மத்திய அரசாங்கம் மணிப்பூரை பற்றியோ, பணவீக்கம் பற்றியோ விவாதிக்கவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த மாலையை அணிந்து வந்தேன்" என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு