தேசிய செய்திகள்

13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 25 வார கருவை கலைக்க அனுமதி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 25 வார கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

25 வார கரு

கர்நாடகத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவளை, வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். தற்போது அந்த சிறுமியின் வயிற்றில் 25 வார கரு வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவளது வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்பு நடந்து வந்தது.

இந்த நிலையில் மனு மீதான இறுதி விசாரணையின் போது நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், சிறுமியின் எதிர்காலம் கருதி அவளது வயிற்றில் வளரும் 25 வார கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அந்த சிறுமிக்கு வாணி விலாஸ் ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு செய்ய வேண்டும். இதற்கு ஏற்படும் செலவை அரசே ஏற்க வேண்டும்.

அரசு ஏற்க வேண்டும்

சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யும் மருத்துவர் கூறினால் கருவை டி.என்.ஏ. பரிசோதனைக்காக மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். டி.என்.ஏ. பரிசோதனை தேவைப்பட்டால் கருவை பெங்களூரு அல்லது ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் தடயவியல் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மனுதாரர், அவரது குடும்பத்தினரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும். மனுதாரருக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர் பரிந்துரை செய்தால் மனுதாரரின் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும் என்றார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்