தேசிய செய்திகள்

பி.எம்.டி.சி. பஸ் மோதி அரசு பள்ளி ஆசிரியை சாவு

அரசு பஸ் மோதி அரசு பள்ளி ஆசிரியை பலியானார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு நாகரபாவி சர்க்கிள் பகுதியில் நேற்று மாலை ஒரு பி.எம்.டி.சி. பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஒரு பெண் மீது பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் சந்தோஷி (வயது 55) என்பதும், அவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்