தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கள் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதி வாலிபர்கள் 2 பேர் பலி

மோட்டார் சைக்கள் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதி வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

தாவரகெரே:

பெங்களூரு தாவரகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொள்ளர்கட்டி அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 25). இவரது நண்பர் சிவராஜ்(29). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அவர்கள் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த பி.எம்.டி.சி. ஏசி. பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தாவரகெரே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.ஆர்.புரம் பகுதியில் மாணவி ஒருவர் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் நடந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்