தேசிய செய்திகள்

சார்ஜ் செய்யும்போது விபத்து- ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த 7 எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் கருகின

இ பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின.

தினத்தந்தி

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது இ பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின.

நேற்று இரவு பைக்குகளுக்கு சார்ஜ் தீசெய்யும்போது 7 எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

விபத்து குறித்து தீயணபைபு துறை அதிகாரிகள் கூறியதாவது:- பைக்குகள் சார்ஜ் செய்வதற்காக இணைக்கப்பட்டிருந்தன. அப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பிடித்து பைக்குகள் எரிந்து நாசாமானது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்